சாயல்குடி, நவ.12: கடலாடி அருகே உள்ள கருங்குளம், சமத்துவபுரம், கடுகுசந்தை சத்திரம், பெரியகுளம், ஒப்பிலான், அலக்குடி, கிருஷ்ணபுரம், டி.மாரியூர் ஆகிய பகுதிகளில் நெல், கம்பு, சோளம், நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான பனைமரங்களும் உள்ளன. மானாவாரி எனப்படும் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மழை தண்ணீரை சேமிப்பதற்காக மலட்டாறு முக்குரோட்டில் உள்ள பெரியகுளம் செல்லும் வழியில் கால்வாயுடன் கூடிய மதகுவை, தொண்டு நிறுவனம் ஒன்று கட்டி கொடுத்தது. மழை காலங்களில் இதில் தேங்கும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் ஓரளவிற்கு விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.