அந்தியூர், நவ.12: அந்தியூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சமத்துவபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதில், மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள், சாலையை சீரமைக்க கோரி அந்தியூர் புதுக்காடு சாலை சமத்துவபுரம் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.