சென்னை, நவ. 12: நொளம்பூர் அருகே லாட்ஜில் போதை பொருள் காய்ச்சியபோது ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். சென்னை நொளம்பூர் அடுத்த அயனம்பாக்கம், மாந்தோப்பு சாலையில் தனியாருக்கு சொந்தமான விடுதி செயல்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன் பதிவு செய்து விட்டு இங்கு வந்தால் அந்த விடுதியில் சமையல் செய்ய அடுப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.இந்த நிலையில், கடந்த 7ம் தேதி பெருங்குடியை சேர்ந்த ரெய்ஸ் ராஜா (34), டிரைவர். இவரது நண்பர்களான மாசி (எ) ராஜேஷ், ராஜி (எ), ஞானவேல்ராஜா, விக்னேஷ், முகமது ரசாக் ஆகிய ஐந்து பேருடன் விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். சம்பவத்தன்று மூன்று பேர் மதுபானம் வாங்க வெளியே சென்றுவிட்டனர். ரெய்ஸ் ராஜா, விக்னேஷ் இருவரும் சாராயம், கஞ்சா மற்றும் போதை தரக்கூடிய ஒருவித அமிலத்தை சேர்த்து காய்ச்சினர். அப்போது ரசாயனம் காற்றில் பரவியது அப்போது ராஜா சிகரெட் பிடிக்க பற்ற வைத்தபோது தீ பற்றி ராஜா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு அலறினர்.