சாயல்குடி, நவ. 8: கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைக்கு கட்டிடங்கள் இடிந்து வருவதால், ஆபத்திலேயே கல்வி பயிலும் அவலம் இருப்பதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். கடந்த 1967ம் ஆண்டு துவங்கப்பட்ட கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 650க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் ஐந்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் உள்ளன. கழிப்பறை கட்டிடம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால் கழிப்பறை கட்டிடங்கள், கோப்பைகள் சேதமடைந்து கிடக்கிறது, கழிப்பறைக்குள் சீமை கருவேல மரங்களும் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். மாணவிகள் வெளியில் செல்லமுடியாமல் பள்ளிக்கு வரும் காலை முதல் மாலை வரை கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருடங்கள் பல ஆகிவிட்டதால், சுற்றுச்சுவர் சேதமடைந்து தாழ்வாக இருக்கிறது. இதனால் பள்ளி இல்லாத நேரங்களில் வரும் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அடுப்பு மூட்டி, கறி சமைத்து, மதுகுடித்துவிட்டு பாட்டில்களையும், சமைத்த பொருட்களையும் வளாகத்தில் தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு நிலவுவதுடன் பாட்டில் உடைந்து சிதறி கிடக்கும் துகள்கள் மாணவர்