பெரம்பலூர், நவ.8: தினக்கூலியாக ரூ.380 வழங்க வலியுறுத்தி பெரம் பலூரில் தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் 150பேர் 7வது நாளாக நேற்றும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தினக் கூலியாக ரூ380 வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்கள், கடந்த 1ம்தேதி முதல் தொடர் வேலைநிறு த்தப் போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றனர். இதன் ஒருகட்டமாக 4ரோடு அரு கேயுள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் 5ம்தேதி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தோடு, மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.