பள்ளிப்பட்டு, நவ. 7: பள்ளிப்பட்டு அடுத்த ஜங்காருபள்ளி ஊராட்சிக்குட்பட்ட 3வது தெருவில் சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இத்தெரு நீண்ட காலமாக மண்சாலையாகவே இருந்து வருகிறது. இதனால், மழைக் காலங்களில் இந்த தெருவின் சாலை சேறும் சகதியுமாக மாறி, குளம் போல் காட்சியளிக்கிறது. அதேபோல் அங்குள்ள வீடுகளில் இருந்து சாலைகளில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இந்த கழிவு நீருடன் தற்போது செய்த மழைநீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதில் உற்பத்தியாகும் கிருமிகள் கடிப்பதால் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது.