திருவில்லிபுத்தூர், நவ. 6:திருவில்லிபுத்தூர் அருகே ஆழ்துளை கிணற்றையும், அதனைச் சுற்றி தோண்டியுள்ள குழியையும் மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை திருவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட துலுக்கன்குளம் கண்மாய் கரையில் வாழவந்தம்மன் கோயில் உள்ளது. இங்கு உள்ள அடிகுழாயில் தண்ணீர் எடுக்க பெருமாள்தேவன்பட்டி, இனாம் கரிசல்குளம், கன்னார்பட்டி, துலுக்கன் குளம், கங்காகுளம், பாலசுப்பிரமணியாபுரம், அழகு தெய்வேந்திரபுரம், நூர்சாகிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பெண்கள் குழந்தைகளுடன் வருகின்றனர். அழகு தெய்வேந்திரபுரத்தில் இருந்து செல்லும் பாதையில் இருந்த ஆழ்துளைக் கிணறு பழுதானதால், அதனைச் சுற்றி ஜேசிபி இயந்திரம் 8 அடி முதல் 10 அடி ஆழமான குழி தோண்டிப் பார்த்து விட்டு, ஆழ்துளை கிணற்றையும், அதனைச் சுற்றி தோண்டிய குழியையும் மூடாமல் விட்டுள்ளதால் தற்போது, மழை நீர் தேக்கி உள்ளது.