திருவண்ணாமலை, நவ.6: திருவண்ணாமலை எஸ்.முருகையன் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர்.திருவண்ணாமலை கீழ்அணைக்கரையில் உள்ள எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி டென்னிஸ் அகாடமியில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் எஸ்.முருகையன் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.