பெரம்பலூர்,நவ.5:பெரம்பலூர் அருகேயிருந்து ஈரோ ட்டுக்கு சிறுமியைக் கடத்தி ச்சென்று திருமணம் செய் த பொக்லைன் ஆப்பரேட்டர் போக்சோ சட்டத்தின்கீழ் சிறை யில் அடைக்கப்பட்டார். பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட17வயது கொண்ட சிறுமியை சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுக்கா, கரையான்பட்டி ஊர்கவுண்டனூ ரை சேர்ந்த நாராயணன் மகனான ஜேசிபி ஆபரேட்டராகப் பணிபுரிந்துவரும் ரத்தினவேல்(25) என்பவர், கடந்த அக்டோபர் 24ம்தேதி யன்று கடத்திச் சென்று விட்டதாக சிறுமியின் தாய் கொடுத்தப் புகாரின்பேரில் பெரம்பலூர் எஸ்ஐ மணிகண்டன் இளம்பெண்ணை கடத்திச்சென்றதாக வழக்குப் பதிவுசெய்து இருவரையும் தேடி வந்தார்.இந்நிலையில் நேற்று ரத்தி னவேல் மற்றும் சிறுமி இருவரும் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் இருப்பது தெரியவந்ததால், அவர்களை பிடித்து ஒப்படைக்கும்படி சத்தியமங்கலம் போலீசாரின் உதவி யை பெரம்பலூர் போலீசார் நாடியதால், சத்தியமங்கலத்திலிருந்து எஸ்ஐ மனோஜ்,ஏட்டு பால முருகன் இருவரும் ரத்தின வேலையும் சிறுமியையும் அழைத்து வந்து பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.