அரியலூர்,நவ.5: அரியலூர் அருகே ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மைப் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ரத்னா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்கள் மழைக்காலங்களில் குடிநீர் காய்ச்சி பருக வேண்டும். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமலும், நீர்நிலைகளில் குழந்தைகள் குளிக்க அனுப்பாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும், வாரணவாசியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதையும், வீடுவீடாகவும், திறந்தவெளிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.