கீழக்கரை, நவ.5: கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் ஊராட்சியில் சேரும் குப்பைகளை அகற்றாமல் அங்கே குவித்து போட்டு தீயிட்டு கொழுத்துகின்றனர். இதனால் அங்கு வாழும் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவுவதோடு, ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சேக் அப்துல் காதர் கூறுகையில், மாயாகுளம் பகுதியில் ஆங்காங்கே சேரும் குப்பைகளை அகற்றுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசி கொசு அதிகளவில் உற்பத்தியாகி வீட்டில் நிம்மதியாக பெரியர்கள் முதல் சிறியவர்கள் வரை தூங்க முடியாமல் தவிக்கின்றனர். பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.