டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

அலங்காநல்லூர், நவ. 5: பாலமேடு அருகே, கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள அறுபத்தாறு உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கம்பளி (36). வேன் டிரைவர். இவரது மனைவி மீனாட்சிசுந்தரி (33). கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேலையால் கம்பளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பாலமேடு போலீசார் கம்பளியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாடிபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கம்பளி தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: