நாமக்கல், நவ.1: புதுச்சத்திரம் அருகே வாலிபரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் போத்தநாயக்கர் மகன் வெங்கடாசலம் (29). தந்தை, மகன் இருவரும் புதுச்சத்திரத்தில் ஓட்டல் நடத்தி வந்தனர். கடந்த 2014 டிசம்பர் 15ம் தேதி வெங்கடாசலம் புதுச்சத்திரத்தில் உள்ள ஒரு பழைய நூற்பாலை அருகில் துணியால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்கள்.