நாகை, நவ.1: வேளாங்கண்ணியில் இருந்து தென்மாவட்டங்களை இணைக்க விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர்கள் நல சங்க கூட்டம் நாகூரில் நடந்தது.
ராஜமாணிக்கம் அமைப்பாளராக செயல்பட்டு பொறுப்பாளர்களை தேர்வு செய்தார். இதில் தலைவராக முகம்மதுதாஹா, செயலாளராக சித்திக், பொருளாளராக மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், அதிகாலையில் விரைவு ரயில் காரைக்கால் அல்லது நாகூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு செல்ல வேண்டும். மறு மார்க்கத்தில் மாலை திருச்சியில் இருந்து நாகூர் அல்லது காரைக்காலுக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து தினசரி விரைவு ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரைக்கு தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இயக்க வேண்டும்.