அரியலூர், நவ. 1: திருமானூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு கட்டுப்பாட்டுக்காக ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் மற்றும் வேளாண்மைத்துறை சார்ந்த பணிகள் குறித்து வேளாண்மை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.அப்போது சாத்தமங்கலம் கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் பணியை பார்வையிட்டார். அதில் மருந்து தெளிக்கும்போது மருந்து தெளிப்போர் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினார்.மேலும் கீழகாவட்டாங்குறிச்சியில் நேரடி நெல் விதைப்பு செய்த மணிவேல் வயல், க.மேட்டுத்தெருவில் நாகரான் அமைத்திருந்த கரும்பு நாற்றாங்காலுக்கான பசுமைகுடில் மற்றும் செம்பியக்குடி கிராமத்தில் பெல்வின் அமைத்திருந்த இயந்திர நடவுக்கான தட்டு நாற்றாங்காலை பார்வையிட்டார்.