பெரம்பலூர், நவ.1: பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்குப் பரு வமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக குமரியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக உருவெடுத்திருப்பதால், அதன் எதிரொலியாக 29,30 ஆகிய 2நாட்களும் காலை மாலையென மாறிமாறி அடைமழையாக பெய்து வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861மி.மீ ஆகும். இதில் நடப் பாண்டு 2019ல் ஜனவரி 1ம் தேதி தொடங்கி அக்டோபர் 29ம்தேதி வரை 580.18மிமீ மழை பெய்துள்ளது. இதில் குறிப்பாக அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆரம்பமே அமர்க்களமாக 16ம் தேதி 217மிமீ, 17ம்தேதி 169மிமீ என மழை பெய்தது. பிறகு 20ம்தேதி 40மிமீ, 21ம்தேதி 50மிமீ, 23ம்தேதி 379மிமீ எனப் பெய்தது.இந்நிலையில் 29ம்தேதி கன்னியாகுமரியில் குறைந்த காற்ற ழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டதால் பெரம்பலூர் உள்ளி ட்ட மத்திய மாவட்டங்கள் வரை கனமழை பெய்தது.இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில், செட்டிக்குளம் 4 மிமீ, பாடாலூர் 27மிமீ, அக ரம்சீகூர் 35மிமீ, லெப்பைக் குடிகாடு 40மிமீ, புதுவேட்டக் குடி 41மிமீ, பெரம்பலூர் 58 மிமீ, எறையூர் 38மிமீ, கிருஷ்ணாபுரம் 59மிமீ, தழுதா ழை 53மிமீ, வி.களத்தூர் 30 மிமீ, வேப்பந்தட்டை 45மிமீ என மாவட்ட அளவில் 430 மிமீ மழை, அதாவது சராச ரியாக 39.09மிமீ மழை கொ ட்டித்தீர்த்தது.