கோவை, நவ.1:கோவை மாநகராட்சியில் 10 இடங்களில் ரூ.11 கோடியே 62 லட்சம் மதிப்பில் உரம் தயாரிப்பு கூடங்கள் அமைக்கும் பணிகளில் 4 இடங்களில் உரம் தயாரிப்பு கூடங்கள் பணி நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட மாநகராட்சி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் ஒரு டன் குப்பைகள் சேர்க்கப்பட்டு இரண்டு நாளைக்கு ஒருமுறை மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை வாகனங்கள் மூலமாக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர்.இந்த நிலையில், வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ப்படும் குப்பையின் அளவை குறைக்க மாநகரில் 50 இடங்களில் உரம் தயாரிக்கும் கூடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 10 இடங்களில் தற்போது ரூ.11 கோடியே 62 லட்சம் மதிப்பில் உரம் தயாரிப்பு கூடங்கள் அமைக்கப்பட்ட உள்ளன.