அறந்தாங்கி, நவ.1: ஆவுடையார்கோவில் அருகே மீமிசலில் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆவுடையார்கோவில் அருகே மீமிசலில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழை மற்றும் அடை மழை காரணமாக மீமிசல் போலீஸ் நிலையம் அருகில் உள்ள விஜய்நகர் பகுதியில் மழை நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் வசிப்போர் வருவாய்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் தண்ணீரை வெளியேற்றும் பணி தாமதமாக நடந்து வருகிறது.