நாகர்கோவில், அக்.31: சுசீந்திரம் கோயிலில் சாமி கும்பிட வந்த பெண்ணிடம், தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி பானு (48). இவர்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து இருந்தனர். நேற்று முன்தினம் காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். குருபெயர்ச்சி என்பதால் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பானு கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை மர்ம நபர் பறித்தார். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பானு, செயினை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். கோயில் முழுவதும் தேடியும் கிடைக்கவில்ைல. இது குறித்து பானு, சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.