பெரம்பலூர், அக்.31:பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் 6வது நாளில் டாக்டர்கள் கண்களை கருப்புத் துணியால் மூடி கட்டிக்கொண்டு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு நூதன போராட்டம் நடத்தினர். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக் கேற்ப அரசு மருத்துவர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்குப் பணி யிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளி ட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்து வர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பி னர் கடந்த 5நாட்களாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனை, வேப்பூர், காரை, கிருஷ்ணாபுரம் ஆகிய வட்டார மருத்துவமனைகள் மற்றும் கிராமப்பு றங்களில் உள்ள 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணி புரியும் 130க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 6வது நாளான நேற்று (30 ம்தேதி) புதன் கிழமையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் அவதியடைந்தனர்.