ராமேஸ்வரம், அக். 31: கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள ராமேஸ்வரம் வந்த 80 வயது மூதாட்டியை போலீசார் காப்பாற்றி முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள மனப்பத்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி தையல்நாயகி(80). இவர்களுககு 3 மகள், ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோபித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய தையல்நாயகி கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான அலுவலகத்திற்கு சென்றவர் தான் அணிந்திருந்த தங்க செயின், தோடு போன்றவற்றை கோயிலுக்கு தானம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.