புதுக்கோட்டை மாவட்டத்தில் 445 மிமீ மழை பதிவு

புதுக்கோட்டை, அக். 31: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் நடவு பணியை தொடங்கி நடத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழை அளவு மி.மீ வருமாறு: ஆதனக்கோட்டை 13மிமீ, பெருங்களூர் 15மிமீ, புதுக்கோட்டை52.20மிமீ, ஆலங்குடி 23மிமீ, கந்தர்வகோட்டை 21 மிமீ, திருமயம் 40.50 மிமீ, அரிமளம் 37.60 மிமீ, அறந்தாங்கி 18.60 மிமீ, ஆவுடையார்கோவில் 14.80 மிமீ, இலுப்பூர் 31 மிமீ, குடிமியான்மழை 15 மிமீ, அன்னவாசல் 13 மிமீ, உடையாளிப்பட்டி 19, கீரனூர்28 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 445 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories: