ஊட்டி, அக். 31: நீலகிரிக்கே உரித்தான சோலை மரங்கள் தொட்டபெட்டா வனப்பகுதியில் வளர துவங்கியுள்ளதால் அதனை பாதுகாக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட ஊட்டி அருகில் உள்ள தொட்டபெட்டா சுற்று வட்டார வனப்பகுதிகளில் யூக்கலிப்டஸ், பைன் போன்ற அந்நிய தாவரங்கள் அடர்ந்துள்ள காடுகளுக்கு நடுவே சோலை மரங்கள் வளர துவங்கியுள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர் வசந்த் பாஸ்கோ கூறுகையில், நீலகிரியில் காணப்படும் சோலை காடுகளில் விக்கி, நாவல், சிறு நாவல், தவிட்டு உள்ளிட்ட 95 மர வகைகள் உள்ளன. அதேபோல் போல் சோலை குறிஞ்சி, ஆர்க்கிட், ேராடாரென்ட்ரான் உள்ளிட்ட 400க்கும் அதிகமான செடி வகைகள் உள்ளன.