தொண்டி, அக். 27: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வியாபாரம் சூடுபிடிக்காமல் மந்த நிலையில் இருந்தது. கடைசி நாளான நேற்று கிராம மக்கள் அதிகமாக வந்ததால் வியாபாரம் களைகட்டியது. தீபாவளி பண்டிகை என்றாலே கிராமம் முதல் நகரம் வரையிலும் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் இம்முறை அதிகம் விருப்பம் இல்லாமமல் இருந்தனர். இதனால் ஜவுளி கடை முதல் மளிகை கடை வரையிலும் வியாபாரம் மந்தமாக இருந்தது.