ஆதனூர் மேட்டுப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

கரூர், அக். 27: ஆதனூர் மேட்டுப்பட்டியில் மக்கள்தொடர்பு முகாம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா ஆதனூர் கிராமம் மேட்டுப்பட்டி துர்க்கை அம்மன் கோயில் அருகில் வரும் 30ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு அவர்களது குறைதொடர்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. எனவே ஆதனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: