தொண்டி, அக். 24: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு தற்போது வெளியாகியுள்ள சீர்திருத்த வாக்காளர் பட்டியல் குளறுபடியாக, குழப்பமாக உள்ளதாகவும் மீண்டும் ஆய்வு செய்ஙது மறு பட்டியல் வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமீபத்தில் திருத்தபட்ட வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் தொண்டியில் உள்ள 15 வார்டுக்கும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படடுள்ளது. இதில் பொதுமக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஆலோசனையும் செய்யாமல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பிட்ட ஒரு தெருவில் வசிப்பவரின் வாக்கு மற்றொரு வார்டில் இருக்கிறது. கணவன் மனைவியை பிரித்து வெளியிட்டுள்ளனர்.குறிப்பிட்ட வார்ட்டில் இருப்பவருக்கு அங்கு வாக்கு இருந்தால்தானே அந்த வார்டுக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற முடியும். எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் வார்டு வரையறை செய்யப்பட்டதாக தெரிகிறது. வாக்காளர்கள் அதிகம் இருக்கும் வார்டுகளை வேண்டும் என்றே குறைத்துள்ளனர். இதனால் வார்டுகளில் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது. இதை சரி செய்ய அனைத்து பொது மக்களின் ஆலோசனையின் படி மீண்டும் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.