சாயல்குடி, அக். 24: கடலாடி அருகே எஸ்.டி. சேதுராஜபுரத்தில் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன் நேற்று ஆய்வு செய்தார்.கடலாடி ஒன்றியம் எஸ்.தரைக்குடி பஞ்சாயத்தில் உள்ள எஸ்.டி.சேதுராஜபுரத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான மயானம் ஊரணி கரையோரத்தில் உள்ளது. ஊரணி கரை வழியாக இறந்தவர் உடலை கொண்டுச் செல்லும்போது மயான பாதைக்கு சாலை வசதியின்றி அவதிப்பட்டு வருகிறோம். மழைக்காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இரவு நேரங்களில் மயானத்திற்கு தெருவிளக்கு வசதியில்லை. இதனை போன்று ரேசன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லை என கலெக்டர் வீரராகவராவிடம் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.