நாகை, அக்.24: நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நாளை (25ம் தேதி) மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட விளையாட்டரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நாளை காலை 9 மணி தொடங்குகிறது. தடகளம், கூடைப்பந்து, நீச்சல் ஆகிய போட்டிகள் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கான தடகள போட்டிகள் 100மீ, 800மீ, 1500மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், மாணவிகளுக்கான தடகள போட்டிகள் 100மீ, 400மீ, 1500மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படும். நீச்சல் போட்டிகள் 50மீ, 100மீ, 200மீ, 400மீ ஃபிரி ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக். 50மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டர் ஃபிளை ஸ்ட்ரோக், 200மீ ஐ.எம். ஆகிய போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்படும்.