புதுக்கோட்டை, அக்.24: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில், தெலங்கானா போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மணி, சக்தி, நடராஜன், சதீஷ், குமரேசன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தீபன் நன்றி கூறினார். ேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், சங்கத்தில் சேரமாட்டோம் என்று எழுதிகேட்டு மிரட்டக் கூடாது, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை பேசி தீர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.