வேலூர், அக்.24: அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலில் திருத்தம் செய்து உடனடியாக அனுப்பி வைக்கும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும், முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்க 01.01.2019 நிலவரப்படி தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.