பரமக்குடி, அக்.23: பரமக்குடி நகராட்சி பகுதிகளில் முன் அனுமதியின்றி சாலையை தோண்டுவது, சாலையை மறைத்து கட்டுமான பொருள்களை கொட்டி வைப்பது போன்ற இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் நகராட்சி சார்பாக தார்சாலை, சிமென்ட் சாலை, பேவர்பிளாக் மூலம் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மேலும், நிதி பற்றாக்குறையால் வார்டுகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், எந்த பணிகளும் நடைபெறாமல் உள்ளது. குறிப்பாக தெருவிளக்கு, கழிப்பறை வசதிகள் படுமோசமாக உள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது.