ஈரோடு, அக். 23: ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக சிக்கன தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளிடம் சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், கல்வி மாவட்டம் வாரியாக கடந்த 18ம் தேதி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, நடனம், நாடக போட்டியில் தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேற்று மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, நடனம், நாடக போட்டி நடந்தது.