ஈரோடு, அக். 23: பாசன பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என ஈரோடு ஆர்டிஒ முருகேசன் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கோட்ட அளவில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கி அவர் பேசியதாவது:
பாசன பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை காலதாமதம் இன்றி உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் மட்டும் வருவாய்துறையினரின் உதவியை நாட வேண்டும். இதேபோல் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறையினர் தங்களுக்கு சொந்தமான இடங்களாக இருந்தால் சம்மந்தப்பட்ட துறையினரே அகற்ற முன்வர வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய்துறையினரை எதிர்பார்க்க வேண்டியதில்லை.