பள்ளிப்பட்டு, அக். 23: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் இருந்த விசைத்தறி கூடங்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பச்சிளம் குழந்தை, சிறுமி, பெண் உட்பட 5 பேர் இறந்த நிலையில் ஏராளமானோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு சுகாதாரம், துய்மை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி தலைமையில் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.