பேராவூரணி, அக். 18: பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் விபத்தில் சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. பேராவூரணி அடுத்த ஆவணம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த அருண்குமார் மகள் சுவேதா (3). இவர் கடந்த 11ம் தேதி ஆவணம்- நெடுவாசல் செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் சுவேதா படுகாயமடைந்தார். இதையடுத்து சிறுமியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுவேதா இறந்தார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசில் அருண்குமார் புகார் செய்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவர்களை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டுபிடித்து போலீசாரிடம் கூறினர்.