தஞ்சை, அக். 18: தஞ்சை வெண்ணாற்றில் வாலிபர் சடலம் கிடந்தது. அவர் யார், கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கிறார்கள்.
தஞ்சை பள்ளியக்ரகாரம் வெண்ணாற்றின் புதரில் நேற்று காலை ஆண் சடலம் கிடந்தது. அவருக்கு 35 வயது இருக்கலாம். ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். கழுத்தில் காயம் உள்ளது. அவர் யார், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. நேற்று காலை ஆற்றில் குளிக்க சென்றபோது சடலம் கிடப்பதை பார்த்த மக்கள், போலீசில் புகார் செய்தனர்.