ஜெயங்கொண்டம், அக். 17: காந்தி பிறந்த நாளையொட்டி ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தூய்மை இந்தியா பாதயாத்திரை நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், இணை பொறுப்பாளர் இலகண்ணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்பி இல.கணேசன் பங்கேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேரணியை துவக்கி வைத்தார்.பேரணியானது காந்தி பூங்காவில் துவங்கி நான்கு ரோடு வழியாக, திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் ஜெயங்கொண்டம் நகரின் எல்லை வரை சென்று முடிவடைந்தது.