திருவாடானை, அக்.17: திருவாடானையில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் மழை தண்ணீர் வெளியேற முடியாமல் வீடுகளில் புகுந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. திருவாடானை வளர்ந்து வரும் நகர் பகுதியாகும்/ இன்னும் ஊராட்சி அந்தரத்திலே இருந்து வருகிறது/ இதனால் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய இயலவில்லை. பொதுமக்கள் சார்பில் திருவாடானை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்பட வில்லை. திருவாடானையில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் மழைத்தண்ணீர் மற்றும் கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்பட வில்லை. சில இடங்களில் கால்வாய் அமைக்கவும் இல்லை. வடக்கு ரத வீதி தெற்கு ரத வீதி ஆகிய இடங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது.