இடமாற்றம் செய்ய கோரிக்கை

விருதுநகர், அக். 16: வத்திராயிருப்பு சமூக ஆர்வலர் மணிமாறன், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வத்திராயிருப்பு பேரூராட்சி பணியாளர்கள் பலரும் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில்  பணியாற்றி வருகின்றனர். இதனால், முறைகேடு அதிகரித்து வருகிறது.உள்ளாட்சி  தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை நடத்த நேர்மையான அதிகாரிகளை  நியமிக்க வேண்டும். திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, விருதுநகர் மாவட்டத்திலும் அனைத்து  பேரூராட்சிகளிலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை  மாற்றம் செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: