பள்ளிகளில் கலாம் பிறந்தநாள் விழா

சாயல்குடி, அக். 16: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி பள்ளிகளில் அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து, மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று கடலாடி பகுதி அரசு பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. கடலாடி அருகே உள்ள நரசிங்கக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் கிருஸ்து ஞானவள்ளுவன் தலைமையிலும், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் பொன்பிரிதாபால், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் சொக்கர் தலைமையிலும், எம். கரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை வீரமாளி தலைமையிலும் நடந்தது.

கடலாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை வில்வஜோதி தலைமையிலும் மாணவர்கள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடினர். இதனையொட்டி மாணவர்கள் தேசிய ஒருமைபாடு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இதனை போன்று தேசிய கைகழுவும் தினமும் நரசிங்கக் கூட்டம் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.

Related Stories: