நீடாமங்கலம்,அக்.16: நீடாமங்கலம் வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு அங்கன்வாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. அங்கன்வாடியில் சாப்பிடும் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்தான இயற்கையில் விளையும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் அங்கன்வாடியில் தோட்டம் அமைப்பதினால் குழந்தைகள் சிறுவயதிலேயே விவசாயத்தின் மீது ஆர்வம் வரும்.