குமாரபாளையம்,அக்.16: பாலியல் வழக்கில் தப்பிய குற்றவாளியை ஒடிசா போலீசார் குமாரபாளையத்தில் ஒரு வாரம் முகாமிட்டு பிடித்தனர். ஒடிசா மாநிலம் கல்மாடியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (21).இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கல்மாடி போலீசாரால் தேடிப்பட்டு வந்தார். போலீசார் தேடுவதை அறிந்த சந்தோஷ்குமார் தலைமறைவானார். தலைமறைவான சந்தோஷ்குமார் அங்கிருந்து தப்பி தமிழகம் வந்து குமாரபாளையத்தில் உள்ள அவரது நண்பர்கள் உதவியுடன் தனியார் நூற்பு ஆலையில் வேலைக்கு சேர்ந்து தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில், கல்மாடி போலீசார் சந்தோஷ்குமாரின் செல்போனை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த 2 வாரமாக செல்போன் சிக்னல் தமிழ்நாட்டில் இருப்பதை காட்டியது. இதையடுத்து செல்போன் சிக்னலை கண்காணித்த கல்மாடி போலீசார் ஒரு வாரம் முன்பு குமாரபாளையம் வந்தனர். பின்னர் சந்தோஷ்குமாரை தேட ஆரம்பித்தினர். இதில் தனியார் நூற்பு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.