திருப்போரூர், அக்.16: திருப்போரூர் கிளை நூலகத்தில் செயல்படும் வாசகர் வட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது திருப்போரூர் கிளை நூலகத்தில் செயல்படும் வாசகர் வட்டம் சார்பில் புத்தகம்படி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. வாசகர் வட்ட தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வி.தனஞ்செழியன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகானந்தன், மகளிர் மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி சம்பந்தம், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.