அறந்தாங்கி, அக்.16: அறந்தாங்கி அருகே சந்தனக்கூடு விழாவிற்கு சென்று வந்த சரக்கு ஆட்டோ மீது, கர்நாடகாவில் இருந்து நண்டு ஏற்றிவந்த வேன் மோதியதில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பிரான்மலை(57), முகமதுஅப்துல்லா(26), அபுதாஹிர்(21), சல்மா(40), சபினாபேகம்(25) உள்ளிட்ட 13 பேர் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவிற்கு ஒரு சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். சந்தனக்கூடு முடிந்து அவர்கள் நேற்று காலை அதே சரக்கு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனம் கள்ளனேந்தல் அரசு கலைக்கல்லூரி அருகே சென்றது. அப்போது எதிரே கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து மீமிசலுக்கு நண்டு ஏற்றி வந்த வேனும், ஆட்டோவும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது.