கணவர் குடித்துவிட்டு தகராறு பெண் தீக்குளித்து தற்கொலை

திருவெறும்பூர், அக்.15: திருச்சி வாழவந்தான்கோட்டை புது பர்மா காலனியை சேர்ந்தவர் திருச்செல்வம். லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா(30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருச்செல்வத்துக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்து வந்தார். அவரை மனைவி கண்டித்தும் திருந்தவில்லை. வழக்கம்போல் நேற்றுமுன்தினம் குடித்துவிட்டு வந்த திருச்செல்வம் மனைவிடம் தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த மஞ்சுளா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அன்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: