அரியலூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், அக். 15: அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. அரியலூர் ராஜாஜி நகர் அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. பெரம்பலூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் நுகர்வோர் பங்கேற்று மின்சாரம் சம்மந்தமான குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடைலாம். இவ்வாறு செயற்பொறியாளர் செல்வராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: