கருத்தையாபுரத்தில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

வி.கே.புரம், அக். 15:  வி.கே.புரம் பிஎல்டபிள்யுஏ மேல்நிலைப்பள்ளி சார்பில் 7 நாட்கள் என்எஸ்எஸ் சிறப்பு முகாம், கருத்தையாபுரத்தில் நடந்தது. சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் சுடலை தலைமை வகித்தார். பள்ளி செயலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சுரேஷ்பாபு திட்ட விளக்கவுரை ஆற்றினார். மாணவர்கள் கருத்தையாபுரத்திலுள்ள வடக்குவாச்சி அம்மன் கோயில் வளாகம், அங்குள்ள பள்ளி வாளகம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணி செய்தனர். பிளாஸ்டிக் கழிவுகள் நீக்குதல், மரக்கன்றுகள் நடுதல், எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி, பாபநாசம் தாமிரபரணி ஆற்று படித்துறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்தனர்.  நிகழ்ச்சிகளில் சாரணிய இயக்க பொறுப்பாளர் இசக்கிராஜ், உடற்கல்வி இயக்குநர்    ஜெயராமன், ஆசிரியர்கள் ஹேமலதா, கந்தன், பசுங்கிளி மற்றும் பிரிலியண்ட் பள்ளி தாளாளர் சின்னசாமி, பள்ளி முதல்வர் பாரதிகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் சகாயராஜ் நன்றி கூறினார்.

Related Stories: