புதுக்கோட்டை, அக்.15: பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வரும் அக். 16ம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-2020ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் வருகிற 16ம் தேதி காலை 9 மணிக்கு துவங்குகிறது. இளநிலைப் பிரிவு- மழலையர் வகுப்பு 5ம் வகுப்பு வரை பயிலும் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளும், முதுநிலைப் பிரிவு - 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்படவுள்ளன.