திருத்தணி, அக். 15: திருவாலங்காட்டில், நிலுவை தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கடந்தாண்டு கரும்பு அரவைக்கு விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு, ₹ 22 கோடிக்கு பில் தொகை வழங்க வேண்டும். விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும், ஆலை நிர்வாகம் நிலுவை தொகையை வழங்காமல் மெத்தனம் காட்டி வந்தது.