நாகர்கோவில், அக்.15: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் அருள்சிவா உள்ளிட்டோர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் ,அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நேற்று காலை நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஷ் தலைைம வகித்தார். உதவி தலைவர் கோபால கிருஷ்ணன், பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.